தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

Loading

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

Loading

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)

Loading

‘சுடர் விடு, மேலும் சுடர் விடு’. உன்னைப் பற்றி யாவற்றையும் மறந்து விடு. கடந்த காலத்தில் உனது வாழ்க்கை ‘அலட்சியம்’, ‘அறியாமை’ நிரம்பியதாய் இருந்தது. உயர்வாழ்வின் சகல அம்சங்களிலும் நீ நிர்க்கதியாக இருந்தாய். உனது அலுவலகப் பணியிலும் கூட பழக்கம் காரணமாகவோ அல்லது நிர்பந்தம் காரணமாகவோ வேலை செய்யும் ஒரு அடிமையாகி விட்டிருந்தாய். இப்போது இந்தப் போக்கை உதறியெறி. அல்லாஹ்வை பற்றி, மக்களை பற்றி, உன்னை பற்றி உண்மையான உணர்வு கொள். புதியவொரு பணியை, புதியவொரு திசையை, புதியவொரு ‘அகத்தை’ தேர்ந்தெடு.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்

Loading

இஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)

Loading

நபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

Loading

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

Loading

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்

Loading

‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?

மேலும் படிக்க